அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர அமெரிக்காவை சென்றடைந்தார்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (23) அமெரிக்காவை சென்றடைந்துள்ளார்.

அமெரிக்க நேரப்படி காலை 8:50 மணியளவில் அமெரிக்காவின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளார்.

Related posts

நாமல் எம்.பியை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

editor

மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

editor

கண்டி நகருக்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor