சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

(UTV|COLOMBO) ஜூன் மாதம் 22ம் திகதி முதல் ஜூலை மாதம் 01ம் திகதி வரை தேசிய போதைப்பொருள் வாரமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும் வலுப்பெறச் செய்து குறித்த செயற்பாடுகளை விரைவுப்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றச்செயல்களை குறைப்பதுடன் தொடர்புடைய சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

Related posts

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE]