உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை

(UTV| கொழும்பு) – தன் மீது முன்வைக்கப்படுகின்றன குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான நீதியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வில்பத்து அழிவு தொடர்பில் தன்னை குற்றவாளியாக சித்தரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினை நிறுவியாவது உண்மையினை தெரியப்படுத்துமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.

Related posts

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு – போக்குவரத்துக்கு பாதிப்பு.