சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ், சட்டத்தரணி பிரேமநாத் சீ. ​தொலவத்த, பேராசிரியர் சன்ன ஜயசுமன,அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த மனுக்களை இன்று உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.

 

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது?

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்

 சாரி அணிந்து மரதன்