உலகம்

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிக்கான மருந்து விநியோகம்

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசிக்கான மருந்து விநியோகம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் பணிகள் பாதுகாப்பாக இடம்பெற்று வருவதாக அமெரிக்க சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அடுத்த வருடம் தடுப்பூசி மருந்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இயன்றவரை தடுப்பூசி மருந்தை விநியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே தடுப்பூசி மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்படலாமென அமெரிக்க சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கை கடற்படையினரால் 32 மீனவர்கள் கைது – இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

editor

இந்திய இராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து : 9 வீரர்கள் பலி, ஒருவர் காயம்! – லடாக்கில் சம்பவம்

ஓமான் அருகே இலங்கையர்களுடன் மூழ்கிய எண்ணெய் கப்பல்!