களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்களுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் வழங்கிய பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபரின் ஊடக அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
அரசியல் அல்லாத காரணங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கும் அறிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் வேறு சட்டவிரோத செயலில் அல்லது தனிப்பட்ட முறையில் வெளிப்பட்ட செயலில் அச்சுறுத்தல் நடத்தப்பட்டதாக உணரப்படுகிறது.
அது என்னவென்று சரியாக அறிவிப்பது பொலிஸ்மா அதிபரின் பொறுப்பாகும்.
அவ்வாறு இல்லாமல் மறைமுகமாக அறிக்கை வெளியிடுவது பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு செய்யப்படும் அவமதிப்பு அறிக்கையென தெரிவித்து அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த அறிக்கையில் வெளிப்படுவது முறைப்பாட்டாளரையும், பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளியாக மாற்றும் முயற்சியாகும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தற்போது அரசாங்கம் செய்வது அனைத்து நிகழ்வுகளும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அல்லது தொடர்புகள் காரணமாக நடந்ததாகக் கூறி சம்பவத்தை குறைத்து மதிப்பிடுவதாகும்.
அரசாங்கத்தின் பிரச்சார திட்டத்திற்கு ஏற்ப பொலிஸ்மா அதிபரின் அறிக்கைகள் சுதந்திரமான பொலிஸின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாகும்.
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கி, பொலிஸ்மா அதிபர் நினைத்தபடி அறிக்கைகளை வெளியிட்டு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளில் நாடு அடக்குமுறை பொலிஸ் அதிகார இருளின் நிழலாகவே நாங்கள் காண்கிறோம்.
இந்த ஆபத்து அனைத்து சனநாயக அரசியல் நீரோட்டங்களில் ஈடுபடும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதை ஊடக சந்திப்பாக மாற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் மூலம் உண்மையான கேள்விகளை மறைக்க எடுக்கும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியான ஜகத் விதான பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு எதிராக நாங்கள் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
ஊடகப் பிரிவு
ஐக்கிய மக்கள் சக்தி
