உள்நாடுபிராந்தியம்

சோதனைச்சாவடி மீது வேன் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி பலி

நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுரவில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயக்கபுர பகுதி நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சோதனைச் சாவடியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகன விபத்தில் உயிரிழந்தவர் கொட்டவெஹெர பகுதியைச் சேர்ந்த ரஸ்நாயக்கபுர பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 37 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஆவார்.

விபத்தின் போது இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ளதுடன், மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி நிக்கவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்து தொடர்பாக வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர் மது அருந்தியிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

editor

14 ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்

editor

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்