சூடான செய்திகள் 1

சொத்து விபரங்களை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்…

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்றில் முதன் முறையாக, குறித்த 05 பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், தாரக பாலசூரிய, விதுர விக்கிரமநாயக்க, எரான் விக்கிரமரத்ன மற்றும் வாசுதேவ நாணனயக்கார ஆகியோரே தாமாகவே முன்வந்து, தமது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

இது ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது சொத்து விபரங்களை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு