உள்நாடு

சைபர் தாக்குதல் – அச்சுத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் மீட்டெடுக்கப்பட்டது

இணையத்தள தாக்குதலுக்கு உள்ளான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் தற்போது மீளமைக்கப்படுவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.  

இன்று (02) இந்த விவகாரங்களை மீளமைக்க முடியும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி திரு.நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான இணையத் தாக்குதல்களை எந்த தரப்பினர் மேற்கொண்டனர் என்பது குறித்த குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 30ஆம் திகதி, பொலிஸாரின் சமூக வலைதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும் தாக்கப்பட்டது.

Related posts

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று அங்குரார்ப்பணம்

எனது உள்ளம் தூமையாது உலமாக்கள் முன் நிலையில் ரிஷாட் பதியுதீன்

editor

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய OIC திடீர் மரணம்