அரசியல்உள்நாடு

சேதமடைந்த மதஸ்தலங்களை புனரமைக்க வக்ஃப் சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

​இந்நிதிக் கொடுப்பனவு இன்று (15-12-2025) சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சில் கையளிக்கப்பட்டது.

​வக்ஃப் சபையின் தலைவர் எம்.எல்.எச்.எம் ஹுசைன் அவர்கள், குறித்த நிதிக் காசோலையை சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

​இந்நிகழ்வில், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களும் வக்ஃப் சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

-ரிஹ்மி ஹக்கீம்

Related posts

‘நமக்காக நாம்’ நிதியத்தின் உறுப்பினராக அஜித்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களது ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பணம்

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் புதிய தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

editor