அரசியல்உள்நாடு

சேதமடைந்த மதஸ்தலங்களை புனரமைக்க வக்ஃப் சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

​இந்நிதிக் கொடுப்பனவு இன்று (15-12-2025) சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சில் கையளிக்கப்பட்டது.

​வக்ஃப் சபையின் தலைவர் எம்.எல்.எச்.எம் ஹுசைன் அவர்கள், குறித்த நிதிக் காசோலையை சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

​இந்நிகழ்வில், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களும் வக்ஃப் சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

-ரிஹ்மி ஹக்கீம்

Related posts

இன்று நள்ளிரவு முதல் அனைத்து தொலைபேசி அழைப்புக் கட்டணங்களும் அதிகரிப்பு

காரில் பயணித்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

editor

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல் ஆரம்பம்

editor