உள்நாடு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறு பிள்ளையின் பொம்மை, காலணி மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்றைய (01) தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது

அதேவேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட மேலதிக பணிகளின் போது மேலும் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து காணப்படுவதால் , அவை எத்தனை என சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது.

அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா காரணமாக வத்தளை பகுதியில் பதற்ற நிலை

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்திப்பு

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

editor