உள்நாடு

செம்மணியில் கட்டியணைத்தவாறு மீட்கப்பட்ட இரு எலும்பு கூட்டு தொகுதிகள்!

ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள், செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு, சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்டவாறும், கால்கள் மடிந்த நிலையிலும் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்று (29) வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வீடியோ | நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் – நாங்கள் பலமாக இருக்கிறோம் – எங்களை வீழ்த்த முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

இரண்டு சகோதரர்களுக்கு இடையே கடுமையான மோதல் – பதுளையில் சம்பவம்

editor