யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தேரர் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர என்ற தேரர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த தேரர், வியாழக்கிழமை (31) அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள சில இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர், நாக விகாரைக்கு சென்று அங்கு இரவு தங்கியிருந்தார்.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, அவர் சடலமாகக் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சடலத்தை மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.