உள்நாடுசூடான செய்திகள் 1

சுய விருப்பத்தில் அலி சப்ரி ரஹீம் விலகிச்செல்வாரா?

(UTV | கொழும்பு) –

தங்க கடத்தலில் ஈடுபட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பாராளுமன்ற   உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

நேற்று (26) மாலை நடைபெற்ற பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதற்கமைய, எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, அலி சப்ரி ரஹீமை சுய விருப்பத்தின் ​பேரில் விலகிச்செல்லுமாறு முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் அதிரடி கருத்து…!

ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு