உள்நாடு

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும்

(UTV | கொழும்பு) – இருபத்தி ஒன்றாவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் தற்போது இயங்கி வரும் சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் முடிவடையும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சட்ட சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், சட்ட சபை நியமனத்தின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய தேர்தல் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு போன்றவை அரசியலமைப்பின் இருபத்தியோராம் திருத்தம் உட்பட ஆணைக்குழுக்கள் மீண்டும் அதிகாரம் பெற்ற நிறுவனங்களாகும்.

Related posts

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

editor

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பாடுபடுகிறது – ஜனாதிபதி அநுர

editor