உள்நாடு

சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் – 6 பேர் கைது

(UTV|கொழும்பு) – தெஹிவளை மற்றும் மஹரகம பகுதிகளில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு(24) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிலோ 290 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுளளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயினுடன் மாலைதீவு பிரஜைகள் இருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை 6 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

வெளிநாட்டவர்கள் ஐவர் கைது

திடீரென உயர்ந்த நீர்மட்டம் – 35 பேரை மீட்ட இராணுவம் – பாரிய உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது

editor