உள்நாடு

சீரற்ற வானிலையால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், 02 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

36 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் திம்பிரிகஸ்யாய பகுதியில் 30 பேர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வர்த்தக நிலைய உரிமையாளர் கொலை – இருவர் கைது

editor

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor

அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல் கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம் – ஜனாதிபதி அநுர

editor