சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை 24 ஆம் திகதி வரை நீடிக்கும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பெரும்பாலான இடங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஜின்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தவளம மற்றும் பத்தேகம ஆகிய பிரதேசங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக காலி மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

“13ஐ முழுமையாக அகற்றும் சட்டத்தை கொண்டு வாருங்கள்”  நீங்கள் இன்னமும் திருந்தவில்லை என்பதை உலகம் அறியட்டும்

பால்மா விலை அதிகரிப்பு

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது