சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை 24 ஆம் திகதி வரை நீடிக்கும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பெரும்பாலான இடங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஜின்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தவளம மற்றும் பத்தேகம ஆகிய பிரதேசங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக காலி மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

கத்தான்குடியில், சஹ்ரானின் குடும்பத்தினர் 30 பேர் ஒரே வீட்டில் கைது!