உள்நாடு

சீனா இலங்கைக்கு வழங்கிய அரிசி அரிசித் தொகை அடுத்த வாரம் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட முதல் தொகுதி அரிசி எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகம் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

500 மில்லியன் யென் பெறுமதியான அரிசி கையிருப்புடன் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தொகுதி அரிசி ஏற்றிய கப்பல் எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.

பள்ளி உணவு திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 10,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்குவதாக சீன தூதரகம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

Related posts

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

‘ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவு’

கொரோனாவின் வீக்கத்தினால் இன்று 201 நோயாளிகள்