உலகம்

சீனாவில் வெள்ளம் – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

(UTV|சீனா) – சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 38 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஜியாங்சி, அன்ஹுய், ஹூபே மற்றும் ஹுனான் மாகாணங்கள் உட்பட 27 பிராந்தியாங்களில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தால் 37.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2.25 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக நாட்டின் மாநில வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத‍ேவேளை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

நாட்டை விட்டு வெளியேறும் ஸ்பெயின் முன்னாள் மன்னர்

போர் நிறுத்தம் இன்றுடன் முடிவா – இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

ஈரான் உயர் நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு – 2 நீதிபதிகள் பலி

editor