கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த சீதாவகபுர நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
அதன்படி, இன்று (15) மேற்படி நகர சபையின் தொடக்க அமர்வில் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சுனில் ஜயரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல், உப மேயர் பதவியை சுயேச்சைக் குழுவிலிருந்து போட்டியிட்ட அஜித் விஜயமுனி சொய்சா கைப்பற்றினார்.