சூடான செய்திகள் 1

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று(18) விடுவிக்கப்பட்டனர்

(UTV|COLOMBO) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 கைதிகள் இன்று(18) விடுவிக்கப்பட்டனர்.

சிறைச்சாலைகள் வரலாற்றில் அதிக கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கைதிகளை விடுதலை செய்வதற்கான நிகழ்வு வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் இன்று(18) காலை இடம்பெற்றது.

736 ஆண் கைதிகளும், 26 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர விளக்கமறியலில்

சாதாரண தர பரீட்சையில்- மேலும் இரண்டு மாணவர்கள் கைது…

அரசிடமிருந்து பொது மக்களுக்கு அறிவித்தல்