தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
மேலும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்க, தனது வழக்கமான பதவியின் கடமைகளுக்கு மேலதிகமாக பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.