உள்நாடு

துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் நீடிப்பு!

சிறைக் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, துஷார உபுல்தெனியவின் சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அவரது விளக்கமறியல் காலம் வரையில் அவருக்கு பாதி
சம்பளம் வழங்ப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

சர்வ கட்சி மாநாட்டை கூட்டுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ஒரு தொகை வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல் – பிரசன்ன ரணதுங்க