அரசியல்

சிங்கப்பூருக்கு பறக்கும் அமைச்சர் அலி சப்ரி.

(UTV | கொழும்பு) –

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அவர் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் விடுத்த அழைப்பின் அடிப்படையில் அலி சப்ரி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

சிங்கப்பூர் வெளிவவிகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ரொய்டர்ஸ் நெக்ஸ்ட் ஆசிய பசுபிக் மாநாட்டிலும் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்க உள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் 9ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

CIDயில் இருந்து வெளியேறினார் சாமர சம்பத் எம்.பி

editor

சதொச விவகாரம் – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு – மீண்டும் விசாரணை ஆரம்பம்

editor

ஜனாதிபதி அநுர தலைமையில் இன்று கலந்துரையாடல்

editor