2008 ஆம் ஆண்டு இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மநுவரனவுக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதிவான் நெத்தி குமார முன்னிலையில் சந்தேக நபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தேசிய காணி விநியோக திட்டத்தில் பங்கேற்றதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று கூறியதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
