உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

(UTV|கொழும்பு)- சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினரும் மேற்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை இரத்து செய்து, செயன்முறைப் பரீட்சையை அரச துறையினர் மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் சங்கத்தினால் துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு அமைய, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் மேற்கொள்வதை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டது

சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் இனந்தெரியா நபர்களுக்கு இடையே துப்பாக்கிப்பிரயோகம்