உலகம்

சவூதியில் சிறுவர்களுக்கான மரண தண்டனை இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | சவூதி அரேபியா) – சவூதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சவூதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பல்வேறு குற்றங்களுக்கு, வழங்கப்பட்டு வந்த கசையடி தண்டனையை, கடந்த சனிக்கிழமை இரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சிறார்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை இரத்து செய்து அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

சவூதியின் இந்த அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Related posts

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம்

சீனாவில் மற்றுமொரு பயங்கர வைரஸ் பரவல்

பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு – 50 பேர் பலி.