சூடான செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை

(UTV|COLOMBO)-சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்;

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், முற்போக்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் கால எல்லை இன்றுடன் நிறைவு

தோல்விகளை வெற்றியை நோக்கி வழி நடத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்-ஜனாதிபதி