விளையாட்டு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று…

(UTV|DUBAI) சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று ஆரம்பமாகிறது.இந்த கூட்டம் இன்று காலை டுபாயில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது, எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கட் போட்டிகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியை இணைத்து கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

ஆர்ஜன்டினாவை வீழ்த்திய இந்தியா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2021 சீசனில் டோனி விளையாடுவார் – ஸ்ரீனிவாசன்

தலைவர் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல்