கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் ஏப்ரல் 25, 2006 அன்று அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தினார்.
தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டி மூன்று பிரதிவாதிகள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (16) ஒத்திவைத்தது.
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்குத் தொடுநர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, இந்த வழக்கில் சாட்சியங்களை விசாரணை செய்வதற்கு மற்றொரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் நீதிபதி பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தொடர்புடைய வழக்கில் சாட்சியங்களை மேலும் விசாரணை செய்ய ஆகஸ்ட் 4 வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.