அரசியல்உள்நாடு

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மாஹிர் தனது கடமையைப் பொறுப்பேற்றார்!

கடந்த 26.06.2025 அன்று சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக ஏக மனதுடன் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர் உத்தியோகபூர்வமாக தனது தவிசாளர் கடமைகளைப் இன்று (30) பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் நோக்கி சிறந்த சேவைகளை வழங்க தவிசாளர் மாஹிர் அவர்களுடன் இணைந்து பயணிப்போம் எனவும், அர்பணிப்புடன் இணைந்து செயலாற்ற உறுதுணையாக நின்று, தொடர்ந்து ஒரு சிறந்த சம்மாந்துறையை உருவாக்குவோம் என சம்மாந்துறையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் முழு இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

editor

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு!

editor

நாட்டிற்கு இம்மாத இறுதியில் 16 இலட்சம் தடுப்பூசிகள்