அரசியல்உள்நாடு

சம்பிக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்

இராஜகிரிய பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வீதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) அனுமதி அளித்துள்ளது.

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனிப்பட்ட விஷயத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்காக, இன்று முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை தற்போதைய வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி, ஏப்ரல் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

Related posts

கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமனம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் குறித்து வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

editor

முதலாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

editor