உள்நாடு

சம்பத் மனம்பேரி விளக்கமறியலில்

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (23) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்படி மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக அவர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் – ஜனாதிபதி அநுரகுமார

editor

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் வருவதில் தாமதமில்லை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும்