உள்நாடு

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 50  வயதுடைய திவுல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் இரு பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : புத்தளத்தைச் சேர்ந்த 04 மெளலவிமார்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

editor

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி