கிசு கிசு

சமூக வலைதளத்தில் முடக்கப்பட்ட இராஜ், பதவி இராஜினாமா

(UTV | கொழும்பு) –  சமூக வலைதள முகநூல் ஊடாக பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்னவின் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியை இராஜ் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடயதான அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், குறித்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அவரது முகநூல் முடக்கத்திற்கான காரணம் இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இராஜின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பேஷல மனோஜ் இது தொடர்பில் முகநூல் பதிவொன்றினையும் பதிவிட்டு, அன்று நான் கூறியதை கேட்டிருந்தால் இன்று இந்நிலைமை வந்திருக்காது என தெரிவித்துள்ளார்.

Related posts

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? 📸

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளை கூகுள் ரத்துசெய்துள்ளதா?