கேளிக்கை

சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கடினம்

(UTV|INDIA)-திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தாலும் முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார். சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்து நாக சைதன்யா சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.

“இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால் காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் செலவிடுகிறோம்.
இந்த படத்தில் நாங்கள் இருவரும் அதிகமாகச் சண்டை போட்டுக்கொள்வதாகக் காட்சிகள் உள்ளன. ஆனால் உண்மையில் நாங்கள் அப்படி இல்லை. இதனால் அந்த காட்சிகளில் நடிப்பது சற்று கடினமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Related posts

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம்

இந்திய அணி சதியால் தோல்வி..டோனியின் ஓய்வு எப்போது? துல்லியமாக கணிக்கும் ஜோதிடர்

மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா…