சப்ரகமுவ மாகாண இராணுவ தின நிகழ்வு நேற்றையதினம் (31) இரத்தினபுரி புதிய நகர் வளாகத்தில் அமைந்துள்ள மறைந்த இராணுவ வீரர் நினைவு தூபி அருகாமையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சர்வ மத தலைவர்களின் மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.
அதனைத் தொடர்ந்து முப்படைகள், காவல்துறை மற்றும் கெடைட் படையினர் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, இராணுவ அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எஸ்.பி. கோஹோனா மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மறைந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள், ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் பலர் இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள இராணுவ வீரர் நினைவு தூபிக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலு்தினர்.
இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மறைந்த இராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு நிதி நன்கொடைகளையும் வழங்கி வைத்தார்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்