உள்நாடு

சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கோப் குழுவின் தலைவரை அல்லது உறுப்பினர்களை தமது அனுமதியின்றி அழைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தான தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அழைக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து சுனில் ஹந்துன்நெத்தி சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள விடயம் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கு எழுத்துமூலம் பதிலளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கூறியுள்ளார்.

Related posts

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

பணம் பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நடவடிக்கை என்கிறது SJB

அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலைக்கு முற்றுப்புள்ளி