சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஐக்கிய மக்கள் சகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முன்மொழிவு கட்சித் தலைமைக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சமர்ப்பிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் சுஜீவ சேனசிங்க கூறுகிறார்.
