உள்நாடு

சனத் நிஷாந்த மரணம் குறித்து சிஐடி விசாரணை

(UTV | கொழும்பு) –   முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, இந்த விபத்து இடம்பெற்ற போது, அந்த வாகனத்திற்கு முன்னால் பயணித்த கொள்கலன் வாகனத்தின் சாரதி நாரஹேன்பிட்டியிலுள்ள குறித்த விசாரணைப் பிரிவுக்குச் சென்று 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்து குறித்து சந்தேகம் உள்ளதாகவும் அது தொடர்பான முறையான விசாரணை நடத்த வேண்டுமெனவும் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தமை குறிப்பிடத்த்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட திட்டங்களை தயாரிக்க வேண்டும் – ஜனாதிபதி கருத்து.

திசர நாணயக்கார மீண்டும் விளக்கமறியலில்

editor