உள்நாடு

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆஜர்படுத்தப்பட்ட 68 சந்தேக நபர்களும் விடுதலை செய்வதற்கு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (04) தீர்மானித்ததாக சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுவினி பெரேரா தெரிவித்தார். இதில் சாட்சிகள் இருவர் உயிரிழந்தமை மற்றும் பொலிஸார் சாட்சியங்களை நீதிமன்றில் முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேக நபர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐஸ் போதைப் பொருளுடன் மருதமுனையில் கைதான இளைஞரிடம் விசாரணை முன்னெப்பு!

editor

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

editor

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு மே மாதம் விசாரணைக்கு