சூடான செய்திகள் 1

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பிட்டிகல, மத்தக பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டிகல, பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து போர 12 வகை துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் மற்றும் கல்கட்டஸ் வகை துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 45 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – துப்பாக்கிதாரியின் காதலி கைது

editor

ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் உள்ளிட்ட 09 நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில்