உள்நாடுசூடான செய்திகள் 1

சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதி!

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், அவருக்கு சேவை நீடிப்பை கோரி ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசை அரசியலமைப்பு சபை நிராகரித்திருந்தது.

இந்நிலையில், இன்று விசேட கூட்டமொன்றையும் அரசியல் அரசியல் அமைப்பு நடத்தவுள்ளது.

இந்த பின்னணியிலேயே அரசியலமைப்பு சபையின் முடிவை புறந்தள்ளி ஜனாதிபதி ரணில், சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அரசியலமைப்பு சபைக்கு 8 பக்கங்களை கொண்ட காட்டமான கடிதமொன்றை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிய ஜனாதிபதி ரணில், அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி பதவி நிலைகளில் மாற்றம்

editor

மன்னார் வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கும் இந்திய அரசாங்கம்

editor

வைத்தியர் முகைதீன் கொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை விதித்த நீதிபதி இளஞசெழியன்