உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், நேற்று (21) இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 4 இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும்கைப்பற்றினர்.
அதன்படி, நேற்று மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை வட மத்திய கடற்படைக் கட்டளைக் குழு அவதானித்ததோடு, மேலும், வட மத்திய கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடலோர ரோந்துக் கப்பல்களை அனுப்புவதன் மூலம் இலங்கைக் கடல் பகுதியிலிருந்து குறித்த மீன்பிடிக் கப்பல்களை அகற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டு எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 4 இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றையும் இலங்கை கடற்படையினர் கைது கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் போது, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகொன்றும் அதில் இருந்த 4 இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குத்துறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.