உள்நாடு

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு

(UTV|COLOMBO) – 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றுவது 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளரான, மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பொருட்களை கைப்பற்றும் நடவடிக்கை மூலம், நாட்டின் வருமானத்திற்கு 599 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதுடன், அவற்றுள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 59 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனூடாக 375 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு தளர்வு தொடர்பிலான அறிவித்தல்

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம்