கைது செய்யப்படுவதற்காக பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
அவர் இதன்போது சட்டத்தரணி சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுடன் அங்கு பிரவேசித்துள்ளார்.
தம்மை கைது செய்வதைத் தடுக்கக் கோரி தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், குணரத்ன வன்னிநாயக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்