அரசியல்உள்நாடு

சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவில் எந்த குழப்பமும் இல்லை – சுமந்திரன் எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து எந்தவித குழப்பமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

தனது எக்ஸ் தள பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவில் அறிவிக்கப்பட்டது போன்று இலங்கை தமிழரசுகட்சி 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற உத்தியோகபூர்வ முடிவை எடுத்துள்ளது.

எனது கட்சியின் அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடும் இதுவே எனது நிலைப்பாடு, இந்த நிலைப்பாடு குறித்து எந்த குழப்பமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம்

editor

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம் – சஜித்

editor

 07 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்