உள்நாடு

சகல கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சகல கட்சிகளினதும் பொதுச் செயலாளர்கள் நாளை(21) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கலந்துரையாடல் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழு, சுகாதார பிரிவு, மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்புக்களின் உயர் அதிகாரிகளுக்கிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆவணங்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவு

இன்று 496 பேர் சிக்கினர்

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு – பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரிஷாட் எம்.பி

editor