உள்நாடு

க.பொ.த சா/த பரீட்சை ; அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான – பரீட்சை அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் தொடக்கம் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலைகளின் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் – பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மே 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, மே 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு 452,979 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குடிநீரில் இரசாயணம் கலந்துள்ளதா ? பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன்

editor

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் பச்சை ஆப்பிள் அறுவடை ஜனாதிபதிக்கு